தெலங்கானாவில் அமித்ஷா கொடுத்த வாக்குறுதி
தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக்கப்படுவார் என தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை ஆமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் மத்தியில்,“மக்களின் நலனை காக்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தவறிவிட்டார். பிரதமர் மோடி மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வார். பாஜக ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக்கப்படுவார்” என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Tags :