அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் செவிலியரை தாக்கிய ஆசாமி

by Editor / 21-07-2022 01:35:00pm
அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் செவிலியரை  தாக்கிய ஆசாமி

கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் செவிலியர் தாக்கியதோடு பணியாளரை மதுபாட்டில் தாக்கிய போதை அசாமியை  போலீசார் விசாரித்து வருகின்றனர்.கஞ்சா போதை தலைக்கேறிய  நிலையில் நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்ற அப்துல் ரகுமான் என்பவர் வயிற்று வலிக்கு மாத்திரை கேட்டுள்ளார். செவிலியர் மாத்திரை எடுத்துக் கொண்டிருந்த போது அவருடன் வாக்குவாதம் செய்த அவர் செவிலியரின் கழுத்தை நெறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. கத்தி கூச்சலிட்டு அதும் காப்பாற்ற வந்த பணிகளையும் அவர் மது பாட்டில் மது பாட்டிலால் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தும் போதை ஆசாமி தன்னைத்தானே வயிற்றில் மது பாட்டிலால் குத்திக் கொண்ட நிலையில் காயமடைந்த இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via