பழிவாங்கப்படும் பாஜகவினர் - 7 பேர் குழு குற்றச்சாட்டு

by Staff / 28-10-2023 05:14:40pm
பழிவாங்கப்படும் பாஜகவினர் - 7 பேர் குழு குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீட்டில் இன்று 7 பேர் கொண்ட பாஜக மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, பாஜக நிர்வாகிகள் பழிவாங்கப்படுவது குறித்து புகார் அளித்துள்ளனர். இது குறித்து பேசிய அக்குழுவினர், தமிழக அரசால் பாஜகவினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர். அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். சமூகவலைதளங்களில் கருத்து பதிவிடுவதை சொல்லி, எஸ்சி,எஸ்டி பிரிவின் கீழும் வழக்கு போடுவதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். திமுக அரசினால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்படும் பாஜகவினரின் நிலையும், ஆளுங்கட்சியின் அத்துமீறல்களையும் ஆய்வு செய்து புகார் அளித்துள்ளோம் என கூறினர்.

 

Tags :

Share via