சவாரி ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதல் - ஆட்டோ ஓட்டுனர் அடித்துக்கொலை -
மதுரை எம் கே புரத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரும், கொலையுண்ட மணிகண்டன் ஆகிய இருவரும் ஷேர் ஆட்டோ மூலமாக ஜான்சி ராணி பூங்காவிலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு எல்லீஸ் நகர் மீனாட்சி அம்மன் கோயில் பார்க்கிங் பகுதியில் ஆட்களை இறக்கி விடுவது வழக்கம்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. இதில் நாகராஜ் அவரது நண்பர் சூரிய பிரகாஷ் ஆகியோர் செங்கலால் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுனரான மணிகண்டன் உயிரிழப்பு - திலகர்திடல் காவல்துறையினர் இந்த கொலைச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Tags : சவாரி ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதல் - ஆட்டோ ஓட்டுனர் அடித்துக்கொலை -