சிறப்பு ரெயில் இயக்கம் இந்திய தூதரகம் அறிவிப்பு
சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் அந்த ரெயிலில் மேற்கு பகுதியை நோக்கி செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து பக்கத்து நாடுகளான ருமேனியா, அங்கேரிக்கு செல்கிறார்கள். அங்கிருந்து இந்திய மாணவர்களை விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தலைநகர் கீவ்வில் இருந்து எல்லைப்பகுதிகளுக்கு செல்வதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் அந்த ரெயிலில் மேற்கு பகுதியை நோக்கி செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
வார இறுதி நாட்களில் கீவ்வில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
Tags :