நாமக்கல்லில் 19 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

by Staff / 30-05-2022 02:00:57pm
நாமக்கல்லில் 19 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

 நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே 19 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.குப்பநாயக்கனுரை சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜீவா ஹரிஹரசுதன் என்பவருக்கு சொந்தமான 40 டன் மிளகாய் விற்பனை செய்து விட்டு வந்தபோது அவரது பைக் வழிமறித்த கும்பல் ஜீவா மீது மிளகாய் பொடியை தூவி 19 லட்சம் ரூபாய் பைக் செல்போனை பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்தியது  விசாரணையில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜீவா கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி நாடகமாடியது அம்பலம் ஆனது. இதனை அடுத்து வேறு பகுதியில் பதுங்கியிருந்த வழிப்பறியில் தொடர்புடைய ஜீவா உட்பட 5 பேரை கைது செய்த போலீஸார் இருவரையும் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via