ரயில் சோதனை ஓட்டம் - எச்சரிக்கை

by Staff / 11-02-2023 03:59:46pm
ரயில் சோதனை ஓட்டம் - எச்சரிக்கை

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே பிப்ரவரி 13ல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை-திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ராலி மோட்டார் மற்றும் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து சோதனை ஓட்டம் நடைபெறும் போது ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via