சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

by Staff / 07-11-2023 02:57:58pm
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

திருச்செந்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இராஜன் என்பவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், சேர்ந்தமங்கலம் கிராமம் கிறிஸ்துவின் பாசறை சபை அருகில் கடந்த 31. 10. 2023 அன்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிய விபத்தில் புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த லசிங்டன் (வயது 35), மற்றும் அலெக்ஸ்சாண்டர் (ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்கள்.

 

Tags :

Share via