போர் நிறுத்தத்திற்கு தயார் - இஸ்ரேல் அறிவிப்பு

by Staff / 07-11-2023 04:00:45pm
போர் நிறுத்தத்திற்கு தயார் - இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்புடனான போருக்கு பிறகு காஸாவின் முழுமையான பாதுகாப்பும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணை கைதிகளை விடுவிக்கும் வரை போரை நிறுத்தும் எண்ணம் இல்லை என கூறிய நேதன்யாஹு, வேண்டுமானால் தற்காலிகமாக போர் தொடுப்பதை நிறுத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல், பாலஸ்தீன் இடையே தொடங்கிய இந்தப் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 

 

Tags :

Share via