வாகனங்களுக்கான வரி உயர்வை திரும்ப பெறவும் - டிடிவி தினகரன்
வாகனங்களுக்கான வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் நிதிவளத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு இயக்கூர்திகள் வரிவிதிப்பு சட்டத்தில் நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்த சட்டமசோதா கவர்னரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு, வாடகை, பயணிகள், சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் என அனைத்து வகையான வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
Tags :