மின்வாரிய செயற்பொறியாளரிடமிருந்து  1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது...

by Admin / 09-11-2023 10:29:05pm
 மின்வாரிய செயற்பொறியாளரிடமிருந்து  1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது...

கோவில்பட்டியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடம் இருந்துகணக்கில் வராத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்வாரிய செயற்பொறியாளராக காளிமுத்து என்பவர் பணிபுரிந்து வருகிறார்.. இவர் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுதா, அனிதா மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்று நண்பகல் ஒரு மணி அளவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடமிருந்து  கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல்  முதல் கட்டமாக தெரியவந்துள்ளது...

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பிற பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மின்வாரிய செயற்பொறியாளரிடமிருந்து  1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது...
 

Tags :

Share via