பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது பலி

by Staff / 19-11-2023 12:38:49pm
பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது பலி

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி, பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. நவம்பர் 14 ஆம் தேதி சித்தார் தாலுக்கா மருத்துவமனையில் மனு மற்றும் வித்யா தம்பதியருக்கு பிறந்து, 17ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஐந்து நாட்களே ஆன குழந்தைக்கு தூங்கும் முன் தாய்ப்பால் கொடுக்கப்பட்டது. இருப்பினும், மறுநாள் காலையில் குழந்தை உயிரிழந்து கிடந்தது. குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூடியுள்ளனர். மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

 

Tags :

Share via