பயங்கரவாதத்தை தடுக்க புதிய பிரிவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

by Staff / 21-11-2023 11:55:40am
பயங்கரவாதத்தை தடுக்க புதிய பிரிவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் பயங்கரவாதத்தை தடுக்க புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும். இதில், 1 டி.ஐ.ஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் செயல்படுவார்கள். ஏற்கனவே ஊழல் தடுப்பு, மதுவிலக்கு, சிலை கடத்தல் என பல்வேறு காவல்துறை பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய பிரிவு தொடங்கப்படுகிறது.

 

Tags :

Share via