ஜம்மு காஷ்மீரில் 14 மணி நேரம் மின்வெட்டு : ஒமர் அப்துல்லா

by Staff / 21-11-2023 02:25:22pm
ஜம்மு காஷ்மீரில் 14 மணி நேரம் மின்வெட்டு : ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் குல்காமில் நடந்த பேரணியில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் , நாங்கள் மத்திய அரசிடம் ஏமாந்து போகிறோம். ஜம்மு காஷ்மீரில் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது. வேலைவாய்ப்பின்மையை தீர்ப்போம், வளர்ச்சியடையச் செய்வோம் என்ற பெயரில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசால் துரோகம் இழைக்கப்படுகிறது.இன்று, பணம் ஏராளமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, 14 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் என்ன? இன்றுவரை மின்வெட்டுக்கு தீர்வு காணப்படாதது ஏன்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

 

Tags :

Share via