இந்தி, தெலுங்கு என 4 படம் தயாரிக்கும் - அட்லி
ராஜா ராணி தொடங்கி ஜவான் வரை வெற்றி படங்களை கொடுத்து முக்கிய இயக்குனராக வலம் வருபவர் அட்லி. தற்போது ஜவான் மூலம் இந்தியிலும் கால் பதித்து வெற்றியடைந்துள்ளார். மேலும் அவரது அடுத்தப்படம் விஜய், ஷாருக்கான் கூட்டணியில் அமையும் என்று தகவல்கள் பரவி வருகிறது. இந்தநிலையில் அட்லி தனது ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம் மூலம் நான்கு படங்களைத் தயாரிக்க போவதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்தியில் வருண் தவண், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி நடிப்பில் ‘தெறி’ ரீமேக்கை தயாரித்து வருகிறார். இதனை தொடர்ந்து தமிழில் 2 படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் படங்களில் இயக்குனர்கள், நடிகர்கள் குறித்து எந்த விவரங்களும் தெரியவில்லை.
Tags :