கஞ்சா வியாபாரிக்கு 51 நாள் சிறை, ரூ 2, 500 அபராதம்

by Staff / 22-11-2023 04:26:20pm
கஞ்சா வியாபாரிக்கு 51 நாள் சிறை, ரூ 2, 500 அபராதம்

திண்டுக்கல் அருகே தோமையார்புரம், வெள்ளோடு பிரிவு ஆகிய பகுதிகளில் கஞ்சா கடத்துவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த2-1- 2006ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் திண்டுக்கல்-மதுரை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் மேட்டுப்பட்டி விஸ்தரிப்பு ஏரியாவை சேர்ந்த அங்குசாமி மகன் ஜான் பிரபாகரன் என்பதும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஞ்சா வியாபாரி ஜான் பிரபாகரனுக்கு 51 நாள் சிறை தண்டனையும், ரூ 2 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via