பெட்ரோல் பங்க் கழிவறைக்குள் உல்லாசம்.பங்க் ஊழியர்கள் சுற்றி வளைத்ததால் தப்பி ஓட்டம்.

by Editor / 23-11-2023 07:45:22pm
பெட்ரோல் பங்க் கழிவறைக்குள் உல்லாசம்.பங்க் ஊழியர்கள் சுற்றி வளைத்ததால் தப்பி ஓட்டம்.

தமிழக கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் செயல்பட்டுவரும்  பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்த இளம்ஜோடிகள்  பாத்ரூம் போக வேண்டும் என சொல்லி கழிவறைக்குள் இருவரும் சேர்ந்து சென்று சுமார் 15 நிமிடங்களுக்கு வெளியே வரவில்லை. இதனால் பயந்துபோன பெட்ரோல்பங்க் ஊழியர்கள் கழிவறை கதவை தட்டிய நிலையில், அந்த இளமை ஜோடிகள்  அரைகுறை ஆடையுடன் வெளியே வந்துள்ளனர்.கழிவறையில் புகுந்து தனிமையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடியை, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சுற்றி வளைத்தனர். இதனையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பங்க் ஊழியர்கள் சுற்றி வளைந்த நிலையில், பைக்கை அங்கேயே விட்டுவிட்டு காதல் ஜோடி தப்பிச் சென்றது. அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.இதுகுறித்து பெட்ரோல்பங்க் ஊழியர்கள் மார்த்தாண்டம் போலீசுக்கு தகலும் கொடுத்தனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த காதலர்கள் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கே போட்டுவிட்டு நைசாக தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னரே போலீசார் அங்கு வந்தனர். காதலர்கள் இருவரும் தப்பிச்சென்ற நிலையில் அவர்கள் வந்த இருசக்கரவாகனத்தை  கைப்பற்றி போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

 

Tags : பெட்ரோல் பங்க் கழிவறைக்குள் உல்லாசம்.பங்க் ஊழியர்கள் சுற்றி வளைத்ததால் தப்பி ஓட்டம்.

Share via