காஞ்சீபுரத்தில் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை
காஞ்சீபுரத்தில் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் ஓரிக்கை வேளிங்கப்பட்டறை சின்னசாமி நகரை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மனைவி கீதா. இவர்களது மகள் ரக்சனா (14), மகன் தர்மேஷ் (12). இவர்களில் ரக்சனா காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் ரக்சனா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :