காவிரியை விட்டுக்கொடுத்த திமுக : அண்ணாமலை

by Staff / 26-11-2023 02:30:25pm
காவிரியை விட்டுக்கொடுத்த திமுக : அண்ணாமலை

காவிரியில் தமிழகத்தின் உரிமையை அரசியல் காரணங்களுக்காக திமுக அரசு விட்டுக் கொடுத்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தஞ்சையில் பேசிய அண்ணாமலை கூறுகையில்; "தமிழகத்திற்கு போதிய நீர் கிடைக்காததால் இந்தாண்டு நெல் கொள்முதல் 3 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக, காவிரியில் திமுக தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்துள்ளது. அன்று டெல்டாவில் காவிரி, மீத்தேன் திட்டங்களை கொண்டுவர கையெழுத்திட்ட திமுகவே இன்று இதற்கும் காரணம்" என்றார்.

 

Tags :

Share via