மக்களவையில் பிரதமர் மோடி உருக்கமான பேச்சு
பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற த்தில் பேசிய பிரதமர் மோடி, “எம்.பி.யாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் முதல்முறையாக நுழைந்தபோது, கீழே விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினேன். ஏழை குடும்பத்தில் பிறந்து, ரயில்வே பிளாட்ஃபாரத்தில் வளர்ந்த நான், மக்களின் பேராதரவை பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என நினைத்துகூட பார்த்ததில்லை” என தெரிவித்துள்ளார்.
Tags :