ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி கலையரசி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும், அதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 13 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணாஇ நடத்தி வருகின்றனர்.
Tags :