இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

by Staff / 28-11-2023 03:32:09pm
இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அக்கட்சி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஜார்ஜ்டவுன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துகள் தொடர்பாக கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

Tags :

Share via