தமிழ் மக்களுக்கு சசிகலா பொங்கல் வாழ்த்து

by Staff / 14-01-2024 01:58:41pm
தமிழ் மக்களுக்கு சசிகலா பொங்கல் வாழ்த்து

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். 'தைப் பிறந்தால் வழி பிறக்கும், தடைகள் அகலும், தலை நிமிரும், நிலை மாறும் இந்த தைத்திருநாளில், தமிழர் தம் வாழ்வில் வளம் பெற்றிட தமிழகத்தில் மக்களாட்சி விரைவில் மலர, தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழி வகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கிட பசியும், பிணியும், பகையும் நீங்கிட, நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திட வேண்டும்' என வாழ்த்தியுள்ளார்.

 

Tags :

Share via