நியோ மேக்ஸ் மோசடி வழக்கு - இயக்குனர் உள்ளிட்ட இருவர் கைது

by Editor / 28-11-2023 11:55:57pm
நியோ மேக்ஸ் மோசடி வழக்கு - இயக்குனர் உள்ளிட்ட இருவர் கைது

 மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதிநிறுவனம் மதுரை எஸ்.எஸ்.காலனியில் இந்நிதிநிறுவனம் செயல்பட்டது. ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிகவட்டி ...கிடைக்கும் என கூறி, பலரையும் இயக்குநராக சேர்த்து ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக முக்கிய குற்றவாளிகளான கமலகண்ணன் உட்பட ஏராளமான நபர்களை போலீசார் கைது செய்துவருகின்றனர்.அந்த நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடந்து வருகிறது.இந்த நிலையில் நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர் திருச்சியை சேர்ந்த வீரசக்தி மற்றும் மற்றொரு இயக்குனரான பாலசுப்ரமணியன் என்பவரின் மகளான லாவண்யா ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.இதில் கைதுசெய்யப்பட்டுள்ள நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர் வீர சக்தி மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : நியோ மேக்ஸ் மோசடி வழக்கு - இயக்குனர் உள்ளிட்ட இருவர் கைது

Share via