புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை.

by Editor / 01-12-2023 09:29:58am
 புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை.

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மண்டலமாக மாறி உள்ளது. இதனால் கடல் பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றது. கடல்பகுதியில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ க்கு சூரைக்காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் எந்தவித படகுகளும் கடலுக்கு செல்லக்கூடாது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.அரசின் எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரித்துள்ளது.

 

Tags : புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை.

Share via