ஜவுளி எடுப்பது போல் நடித்து ஐந்து பவுன் செயினை பறிக்க முயற்சி .
கோவில்பட்டி பசுந்தனை சாலையில் முத்து மாரியம்மன் என்ற பெயரில் செருப்பு மற்றும் ஜவுளி கடை நடத்தி வருபவர் கதிர்வேல் நகரைச் சேர்ந்த செல்வத்துரை இவர் இன்று மாலை மனைவி அம்பிகாவை கடையில் இருக்க வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் முருகானந்தம் இவர் கடைக்கு வந்து ஜவுளி எடுப்பது போல் நடித்து அம்பிகா அணிந்திருந்த ஐந்து பவுன் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அம்பிகா அவரது சட்டையை பிடித்து விடாமல் போராடி உள்ளார். அப்பெண்ணை கீழே தள்ளி கழுத்தை நெரித்து பலமாக முருகானந்தம் தாக்கியுள்ளார் இவரது அலரல் சத்தம் கேட்ட அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் பொது மக்கள் கடையில் என்ன நடக்கிறது என்று பார்த்த போது அம்பிகாவை தாக்கி விட்டு செயினை பறித்து ஒட முயற்சி செய்துள்ளார்.உடனடியாக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்கள் முருகானந்தத்தை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்,தாக்குதலால் காயம் அடைந்த அம்பிகாவை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :