மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையினால் 34 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

by Editor / 05-12-2023 10:06:19pm
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையினால் 34 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையினால் 34 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த குடும்பத்தினரை மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வீடு சேதமடைந்த குடும்பங்களுக்கு ரூ.5000 வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையினால் 34 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன

Share via