முன்னாள் பிரதமரின் மனைவிக்கு சம்மன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷா பீபிக்கு தேசிய பொறுப்புடைமை பணியகம் (என்ஏபி) சம்மன் அனுப்பியுள்ளது. தோஷன்கானா வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராவல்பிண்டியில் உள்ள அலுவலகத்தில் டிசம்பர் 11ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான தங்க நெக்லஸ், வைர மோதிரம் மற்றும் வளையல் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Tags :