அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம்

by Staff / 15-12-2023 04:05:12pm
அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம்

லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட, அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி தனது வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி கைது செய்யப்பட்டார். தன் வழக்கை சிபிஐயிடம் மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமலாக்கத்துறை அதிகாரியை விசாரிக்க முழு உரிமை உள்ளது என்று கூறி, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via