ஒரே நாளில் 22, ஆயிரம் ஆவணங்கள் பதிவு மூலம் ரூ192 கோடி வருவாய்.
சுப முகூர்த்த தினங்களில் அதிகமாக ஆவணபதிவு நடைபெறும் என்பதால் முன்னதாகவே டோக்கன் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் சார் பதிவகங்களில் டிசம்பர் 14 அன்று ஆவணங்களின் பதிவு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதலான டோக்கன்கள் வழங்கப்பட்டன. டிசம்பர் 14 அன்று பதிவு செய்யப்பட்ட 22,060 ஆவணங்களின் மூலம் அரசுக்கு வருவாயாக ரூபாய் 192 கோடி வரப்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் பதிவுத்துறையில் ஒரே நாளில் இது வரை வரப்பெற்ற வருவாயில் நேற்றைய தினம் பெறப்பட்ட வருவாயே மிக அதிகமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : ஒரே நாளில் 22, ஆயிரம் ஆவணங்கள் பதிவு மூலம் ரூ192 கோடி வருவாய்.