போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு

by Staff / 20-12-2023 03:20:51pm
போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு

சத்தீஸ்கர் மாநிலம் சுகுமா மாவட்டத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகரம் காவல் நிலையத்திற்குட்பட்ட கொத்தப்பள்ளி வனப்பகுதியில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. மாவோயிஸ்டுகளின் முகாமை போலீசார் அழித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மாவோயிஸ்ட் முகாமில் இருந்து கனரக வெடிபொருட்கள் மற்றும் மாவோயிஸ்ட் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

 

Tags :

Share via