ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வி துறை - ஆளுநர் ரவி ஒப்புதல்
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வி துறை வழங்கியதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் அவருடைய அமைச்சர் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜ கண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அறிவித்துள்ளார்.
Tags :