"பெண்கள் மீது நிரம்பி வழியும் காதல்" 8.658 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

by Editor / 25-11-2022 08:30:43am

துருக்கி நாட்டில் முஸ்லீம் மத குருவாக இருப்பவர் அட்னான் ஒக்டர். 66 வயதான இவர் 1000 பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதுக்குறித்து அறிந்த போலீசார் இவரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு 8.658 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இவருக்கு தனியாக சேனல் இருந்ததாகவும் அதில் மத பிரச்சாரங்களை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அங்கு பணிப்புரியும் பெண்களை பிகினி உடையில் தனக்கு மசாஜ் செய்யுமாறு கொடுமைப்படுத்தியுமுள்ளார். அதுமட்டுமின்றி பல பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது 69,000 கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் விசாரணையின் போது, ​​தோல் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் முறைகேடுகளுக்கு சிகிச்சையளிக்க அவை பயன்படுத்தப்பட்டதாக அட்னான் ஒக்டர் தெரிவித்துள்ளார்.

அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்,மேலும் தனக்கு "1,000 தோழிகள்" இருப்பதாகவும் "பெண்கள் மீது நிரம்பி வழியும் காதல்" இருப்பதாகவும் கூறினார்.

 

Tags :

Share via