தேசிய போதைப்பொருள் தடுப்பு மாநாடு அமித்ஷா முன்னிலையில் 30 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் தீயிட்டு அழிக்க ஏற்பாடு

by Editor / 30-07-2022 03:14:48pm
தேசிய போதைப்பொருள் தடுப்பு மாநாடு அமித்ஷா முன்னிலையில் 30 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் தீயிட்டு அழிக்க ஏற்பாடு

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் போதை பொருள் தடுப்பு தொடர்பான தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர்  பங்கேற்க உள்ள அதிகாரிகள் முன்னிலையில் இன்று 30 ஆயிரம் கிலோ எடை கொண்ட போதை பொருள்களை நாட்டின் நான்கு பகுதிகளில் ஒரே நேரத்தில் தீயிட்டு அழிக்க உள்ளனர். இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் முன்னிட்டு குறைந்தது 75 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களை ஒழிப்பது என்று அதிகாரிகள் சபதம் எடுத்தனர். இந்த நிலையில் திட்டமிட்ட இலக்கை விட அதிகமான அளவுக்கு போதை பொருட்களை அளித்து போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக யுத்தத்தில் மகத்தான வெற்றியை அடைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via