தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளைப் பாா்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை

by Admin / 26-12-2023 09:38:29am
தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளைப்  பாா்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளான நிலையில், தமிழக அரசு, மத்திய ஆய்வு குழு பார்வையிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி- தூத்துக்குடி  அங்குள்ள மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கினார்.  ஒவ்வொரு மாவட்டத்தில் யார்? யார் உயிர் இழந்திருக்கிறார்கள். எத்தனை ஆடு- மாடுகள் ,கோழிகள் உயிரிழந்த உள்ளன என்றும்  எத்தனை குடிசை வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன  என்கிற கணக்கெடுப்பு அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது .இன்னும் வெள்ளம் வெளியாகத பகுதிகளில் அவற்றை அகற்றுவதற்கான பணிகளையும் தமிழ்நாடு அரசு  மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  மத்திய அரசினுடைய பிரதிநிதியாக இன்று தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பிற்கு பகுதிகளைப்  பாா்வையிடுவதற்காக தமிழ்நாடு வந்துள்ளார்...

 

 

Tags :

Share via