ஏவுகணை தாக்குதலில் 27 பேர் பலி

by Staff / 30-12-2023 12:06:54pm
ஏவுகணை தாக்குதலில் 27 பேர் பலி

ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 122 ஏவுகணைகள் மற்றும் 36 ஆளில்லா விமானங்கள் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களை தாக்கின. இந்த தாக்குதல்களில் 27 பொதுமக்கள் கொல்லப்பட்டன நிலையில், 144 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 22 மாத காலப் போரில் உக்ரைனுக்கு எதிரான மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

 

Tags :

Share via