ரயில் பாதை பராமரிப்பு பணிக்காக  ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து- தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

by Editor / 30-12-2023 07:59:23pm
ரயில் பாதை பராமரிப்பு பணிக்காக  ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து- தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

ஜனவரி 1 தேதி முதல் 5 தேதி வரை  திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்படுகிறது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே 8 முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது, மேலும் வாஞ்சி மணியாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய இரு சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில்கள் திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியாக ரத்து ரத்து செய்யப்படுவதாகவும், பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் மற்றும் சென்னை - திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது

 

Tags : ரயில் பாதை பராமரிப்பு பணிக்காக  ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து- தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

Share via