மாரடைப்பால் மரணமடைந்த அதிமுக நிர்வாகி உடலுக்கு EPS அஞ்சலி

by Staff / 06-01-2024 04:20:49pm
மாரடைப்பால் மரணமடைந்த அதிமுக நிர்வாகி உடலுக்கு EPS அஞ்சலி

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியகுழு தலைவராக பானுமதி பாலசுப்பிரமணியம் உள்ளார். அவரது கணவர் பாலசுப்பிரமணியம் சேலம் புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார். இவர் நங்கவள்ளி பகுதியைச் சார்ந்தவர் நேற்று ஜனவரி 5ஆம் தேதி மதியம் பாலசுப்பிரமணியத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார். பொதுமக்களின் அஞ்சலிக்காக பாலசுப்பிரமணியத்தின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதிமுக நிர்வாகி பாலசுப்பிரமணியம் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை நங்கவள்ளி வந்து பாலசுப்பிரமணியின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரோடு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Tags :

Share via