பழனியில் கடையடைப்பு போராட்டம்
பழனி முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதிலும் விடுமுறை பண்டிகை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பழனி அடிவாரம், கிரிவீதியில் பக்தர்கள் கூட்டம் கூடினர். பழனி முருகன் கோவில் மலையடிவாரம் பகுதியில் வர்த்தகர்கள் சங்கம் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மலையடுவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
Tags :