கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff / 20-01-2024 01:53:00pm
கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி நீதிமன்றத்தில் ஆஜர்

கடலுார் திமுக எம்.பி., ரமேஷ் (50). இவருக்கு, சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி கோவிந்தராசு, 2021 செப்டம்பரில் கொலை செய்யப்பட்டார். கடலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் மற்றும் முந்திரி ஆலை ஊழியர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கடலூர் முதன்மை நீதிமன்றத்தில் இருந்து, செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இவ்வழக்கு, செங்கல்பட்டு முதன்மை நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா முன், நேற்று, விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக எம்.பி., ரமேஷ், வினோத் (30), சுந்தர்ராஜ் (26), அல்லா பிச்சை (41), தங்கவேல் (48), நடராஜன் (31), ஆகியோர் ஆஜராகினர். வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு, ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via