ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் கட்சிகள்

by Staff / 24-01-2024 12:52:26pm
ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் கட்சிகள்

குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி அளிக்கவுள்ள தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. ஏற்கனவே ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் நேற்றைய தினம் நேதாஜி பிறந்தநாள் விழாவில் மகாத்மா காந்தியைக் குறித்த ஆளுநரின் கருத்து சர்ச்சையானது. இதனைத்தொடார்ந்து ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக முக்கியக் கட்சிகள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via