குடியரசு தின அணிவகுப்பு - திரௌபதி முர்மு, இம்மானுவேல் மேக்ரான் வருகை
இந்திய நாட்டின் 75வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் செங்கோட்டைக்கு சென்றனர். மதியம் 12.10 மணி வரை நடைபெறும் இந்த அணிவகுப்பில் 80 சதவீதம் பேர் பெண்கள் பங்கேற்கின்றனர். 90 பேர் கொண்ட பிரெஞ்சுக் குழுவும் பங்கேற்கும். பிரான்சின் 2 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் ஒரு போக்குவரத்து விமானத்தின் சாகச நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
Tags :