550வது நாளை எட்டிய அறப்போராட்டம் - சீமான் ஆதரவு
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மக்களால் 550வது நாட்களாக நடத்தப்பட்டு வரும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அயராது போராடி வரும் மக்களின் போர்க்குணமும், போராட்ட உணர்வும் போற்றுதற்குரியது. இதே பற்றுறுதியோடும், உறுதிப்பாடோடும் இறுதிவரை நின்று, போராட்டத்தின் நோக்கத்தில் வெற்றியடைய எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, மண்ணின் மக்களோடு எப்போதும் நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என இச்சமயத்தில் உறுதியளிக்கிறேன்' என கூறியுள்ளார்.
Tags :