வீட்டிலேயே சிகிச்சை எடுக்கக் கூடாது: அமைச்சர் மா. சுப்ரமணியன்

by Staff / 26-01-2024 05:24:56pm
வீட்டிலேயே சிகிச்சை எடுக்கக் கூடாது: அமைச்சர் மா. சுப்ரமணியன்

மக்களுக்கு காய்ச்சல் மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டால் மருத்துவர்களை ஆலோசிக்காமல் வீட்டிலேயே சிகிச்சை எடுக்கக்கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக ஜலதோஷம், காய்ச்சல் மாதிரியான நோய்களுக்கு மருத்துவர்களை அணுகாமல் மருந்தகங்களில் மருந்து வாங்கி உண்ணும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இது நாளடைவில் பிரச்சனையாக மாறும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்

 

Tags :

Share via