அடுத்த 7 நாட்களுக்குள்... மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு
அடுத்த 7 நாட்களுக்குள் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும்" என மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வரலாம், என ஜனவரி தொடக்கத்தில் பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடங்களில் இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Tags :