செந்தில் பாலாஜிக்கு ஜன.31 வரை நீதிமன்றக் காவல்

by Staff / 29-01-2024 01:26:20pm
செந்தில் பாலாஜிக்கு ஜன.31 வரை நீதிமன்றக் காவல்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 17வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று மீண்டும் நீட்டித்துள்ளது. காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜரான நிலையில், ஜன.31 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via