திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 1611 கோடி ரூபாயை காணிக்கை.

by Editor / 30-01-2024 10:36:50pm
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 1611 கோடி ரூபாயை காணிக்கை.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவினர் 2024-25 நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ஏழுமலையான் கோவிலில் நடப்பாண்டு 5141 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ஏழுமலையானுக்கு பக்தர்கள் 1611 கோடி ரூபாயை காணிக்கையாக சமர்ப்பித்து இருந்த நிலையில் அடுத்த நிதியாண்டிலும் அதே அளவுக்கு காணிக்கை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.தேவஸ்தானம் வங்கியில் செய்துள்ள நிரந்தர வைப்பு நிதிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 1068 கோடியே 51 லட்ச ரூபாய் வட்டி வருமானம் தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ளது.

 

Tags : ரூ. 1611 கோடி ரூபாயை காணிக்கை.

Share via