ஓ.பி.எஸ் பேசும்.போது காலியான சேர்கள் கலைந்து.சென்ற மக்கள்...

by Editor / 08-02-2024 10:41:54am
ஓ.பி.எஸ் பேசும்.போது காலியான சேர்கள் கலைந்து.சென்ற மக்கள்...

தென்காசியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் காலி நாற்காலிகளுக்கிடையே பேசிய முன்னாள் முதல்வர் ஓ..பன்னீர் செல்வம்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. .ஆரம்பத்தில் ஆட்டம் பாட்டம் என மேளதாளத்துடன் துவங்கிய கூட்டம், அதன் பிறகு களை இழந்தது.  கூட்டத்தில் பேசியவர்கள், நடப்பு அரசியல் குறித்து  உற்சாகமாக  எதையும் பேசாததால், பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் வெறுப்படைந்து கூட்டத்திலிருந்து, வெளியேறினர். அதிலும் குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசும் போது பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தது .அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மக்கள் வாகனங்களில் கலைந்து  சென்றனர்.

மேலும் கூட்ட ஏற்பாடுகளை சரிவர செய்யாததால் கூட்டத்தின் போது தொண்டர்களுக்கு இடையே அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டது  குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : ஓபிஎஸ் பேசும்போது காலியான சேர்கள் கலைந்துசென்ற மக்கள்...

Share via