தென்காசியில் வெறி நாய்கள் தொல்லை அதிகரிப்பு சாலையில் செல்வரை விரட்டி விரட்டி கிடைக்கும் நாய்கள்

by Editor / 09-02-2024 12:25:03am
தென்காசியில் வெறி நாய்கள் தொல்லை அதிகரிப்பு சாலையில் செல்வரை விரட்டி விரட்டி கிடைக்கும் நாய்கள்

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் குறிப்பாக பல வார்டுகளில் வெறிநாய்கள் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நகராட்சியில் பலமுறை தெரிவிக்கவும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது சமயம் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களும் நாய் தொல்லை குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனுக்களை நேரில் சென்று அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் தெருவில் மசூசு என்பவரையும் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஒருவரையும் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி அன்று மதியம் ஒன்று முப்பது மணி அளவில் பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற முதியவர் ஒருவரை நாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் அந்தக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கும் போது காலை முதல் இரவு வரை வெறி நாய்கள் தொல்லை அந்த பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் சுமார் 100 நாய்கள் கூட்டம் கூட்டமாக வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

Tags : தென்காசியில் வெறி நாய்கள் தொல்லை அதிகரிப்பு சாலையில் செல்வரை விரட்டி விரட்டி கிடைக்கும் நாய்கள்

Share via