கிரிப்டோ கரன்சி முதலீடு - போலீஸ்காரர் கைது

by Staff / 09-02-2024 03:10:58pm
கிரிப்டோ கரன்சி முதலீடு - போலீஸ்காரர் கைது

திருவண்ணாமலை மாவட்டம்  வெம்பாக்கம் அப்துல்லாபுரத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது நண்பர் மனோகரன் (32) ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து போலீசில் காவலராக பணியாற்றி வருகிறார். 'கிரிப்டோ கரன்சி'யில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ரூ.18,000 வட்டி தருவதாக, விஸ்வநாதனிடம் மனோகரன் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ல், மனோகரன் மற்றும் குடும்பத்தினரின் வங்கி கணக்குகளுக்கும், நேரடியாகவும், ரூ.66 லட்சத்தை விஸ்வநாதன் கொடுத்துள்ளார். இதையடுத்து விஸ்வநாதனுக்கு, வட்டியாக ரூ.20 லட்சம் மனோகரன் கொடுத்துள்ளார். ஆனால், தொடர்ந்து வட்டி அளிக்காததால், பணத்தை விஸ்வநாதன் கேட்டுள்ளார். பணத்தை தராமல் ஏமாற்றியதால், போலீசில் விஸ்வநாதன் புகாரளித்தார். விசாரித்த போலீசார் மனோகரம் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, மனோகரனை இரு நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

 

Tags :

Share via